பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
12:07
காஞ்சிபுரம்:ஆடி கிருத்திகையையொட்டி, காஞ்சிபுரத்தில், காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.ஆடிக் கிருத்திகை விழா, 26ல், கொண் டாடப்பட உள்ளது.
காஞ்சிபுரம், வல்லக்கோட்டையில் சுப்ரமணிய சுவாமி கோவில், திருப்போரூர், கந்தசுவாமி, பெருக்கரணை நடுபழனி பால தண்டாயுதபாணி உள்ளிட்ட முருகன் கோவில்களில், சிறப்பு பூஜைகள் மற்றும் வழிபாடுகள் நடைபெற உள்ளன.முருகனுக்கு, நேர்த்திக்கடனாக பக்தர்கள், காவடி எடுத்து சென்று வழிபடுவர். ஆடி கிருத்திகையொட்டி, காஞ்சிபுரத்தில், காவடி கூடைகள் தயாரிக்கும் பணியில், தொழிலாளர்கள் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இது குறித்து, காவடி கூடை தயாரிப்பாளர், டி.நடேசன் கூறியதாவது:மூன்று தலைமுறை களாக, மூங்கிலான பொருட்களை தயார் செய்கிறோம். கடந்த ஆண்டு, கிலோ மூங்கில், 8 ரூபாய்க்கு கிடைத்தது. தற்போது, 12 ரூபாய்க்கு விற்பனையாகிறது. ஒரு ஜதை காவடி கூடையை, 850 ரூபாய்க்கு விற்பனை செய்கிறேன்.இவ்வாறு, அவர் கூறினார்.