குளத்துார் காளனம்பட்டியில் சித்திவிநாயகர் கோயில், பெரிய கும்பிடு விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
12ஜூலை 2019 01:07
வடமதுரை:குளத்துார் காளனம்பட்டியில் சித்திவிநாயகர், சவுந்தரராஜப் பெருமாள், அஜ்ஜம்மாள், நாகம்மாள், லாடசன்னாசி, போரம்மாள் கோயில் பெரிய கும்பிடு விழா நடந்தது.
கடந்த ஜூலை 8 மாலை மந்தைகவுடர் அழைப்புடன் துவங்கிய விழாவில், பாதகுரடு ஏறிவருதல், பொங்கல் நெய்வேத்தியம், பெரிதனக்காரர்களுக்கு பட்டம் கட்டுதல், பூச்சாடு அழைப்பு, பொதிக் கால் நடுதல் என பல்வேறு பாரம்பரிய வழிபாட்டு நிகழ்வுகள் நடந்தன. ஏற்பாட்டினை ஒக்கலிகர் சவுந்தரியார் குல தாயாதிகள் செய்திருந்தனர்.