பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
02:07
கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அடுத்த, அக்ரஹாரம் சிவாஜி நகரில் உள்ள ருக்மணி சமேத பாண்டுரங்கர், அம்பா பவானி கோவிலின், 83ம் ஆண்டு பிரம்மோற்சவ விழா இன்று (ஜூலை., 12ல்) துவங்கி வரும், 18 வரை ஏழு நாட்கள் நடக்கிறது.
அதன்படி, இன்று (ஜூலை., 12ல்) கொடியேற்றத்துடன் துவங்கும் இவ்விழாவில், அபிஷேக ஆராதனை, சிறப்பு அலங்காரங்கள், பூஜை, அகண்ட நாம பஜனை, ஜண்டா, கோலாட்டம் ஆகிய நிகழ்ச்சிகள் நடக்கின்றன. 16ல், சேலம் தாரை நாராயணராவின் பக்தி சொற்பொழிவு, கலை நிகழ்ச்சிகள், கோபாலகாலா நிகழ்ச்சி, 17 காலை கிருஷ்ணமூர்த்தி பாகவதர் தலைமையில், ருக்மணி திருக்கல்யாண வைபவம், மாலை அலங்கரிக்கப்பட்ட தேரில் உற்சவ மூர்த்திகள் நகர்வலம் நடைபெறும்.