பதிவு செய்த நாள்
12
ஜூலை
2019
02:07
தர்மபுரி: தர்மபுரி அடுத்த, மேல்கன்னியான்கொட்டாய் கிராமத்தில் உள்ள வீரசஞ்சீவி ஆஞ்ச நேயர் கோவிலில், நேற்று (ஜூலை., 11ல்) கும்பாபிஷேக விழா கோலாகலமாக நடந்தது.
கடந்த, 1ல், முகூர்த்த கால்கோல், கங்கணம் கட்டும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் (ஜூலை., 10ல்) காலை, 7:00 மணிக்கு கணபதி ஹோமம், லட்சுமி ஹோமம், தீர்த்தக்குடம் எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. மாலை, 6:00 மணிக்கு இரண்டாம் கால பூஜை நடந்தது. நேற்று (ஜூலை., 11ல்) காலை, 10:35 மணிக்கு கோவில் கோபுர கலசத்துக்கு புனித நீர் ஊற்றப்பட்டு, கும்பாபிஷேகம் செய்யப்பட்டது. ஊர் மந்திரிகவுண்டர் மூர்த்தி, கோல்காரர் கிருஷ்ணன் மற்றும் காளியப்பன் உட்பட பலர் பங்கேற்றனர்.