தூத்துக்குடி: பேய்க்குளம் அருகே வெங்கடேஸ்வரபுரம் சுந்தராச்சி அம்மன் கோயில் கும்பாபி ஷேகம் நேற்று (ஜூலை., 11ல்) நடந்தது.
இக்கோயிலில் கோபுரம், புதிய மண்டபங்கள் அமைக்கப்பட்டன. ஜூலை 8ல் விக்னேஷ்வர பூஜையுடன் விழா துவங்கியது. தொடர்ந்து யாக சாலை பூஜைகள் நடந்தன. நேற்று (ஜூலை., 11ல்) காலை 11:00 மணிக்கு கும்பாபிஷேகம் நடந்தது. கணேச பட்டர் குழுவினர் பூஜைகளை செய்தனர். அன்னதானம் வழங்கப்பட்டது.
சுந்தராட்சி அம்மன் பூஜா கமிட்டி, எம்.எஸ்.ராஜகோபாலன், வி.பாபு, வி.சுப்பிரமணியசர்மா, முருகன், சீனிவாசன், ஐயப்பன், சி.என். சுப்பிரமணியன், ராமையா உள்ளிட்டோர் ஏற்பாடுகளை செய்தனர்.