திருவண்ணாமலை: திருவண்ணாமலையில் மாதந்தோறும் பவுர்ணமியன்று, லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் சென்று, அருணாசலேஸ்வரர், உண்ணாமுலையம்மனை தரிசனம் செய்து செல்கின்றனர். அதன்படி, ஆனி மாத பவுர்ணமி திதி, நாளை அதிகாலை, 2:43 மணி முதல், 17ம் தேதி அதிகாலை, 3:34 மணி வரை உள்ளது. இதுவே, கிரிவலம் செல்ல உகந்த நேரம் என, கோவில் நிர்வாகம் அறிவித்துள்ளது.