பதிவு செய்த நாள்
15
ஜூலை
2019
12:07
ஜம்மு: ஜம்மு - காஷ்மீர் மாநிலத்தில், அமர்நாத் பனிலிங்கத்தை தரிசிக்கும் யாத்திரை, கடந்த, 1ம் தேதி துவங்கியது. இதுவரை, 12 குழுக்களாக, 1.5 லட்சத்துக்கும் அதிகமானோர், பனி லிங்கத்தை தரிசித்துள்ளனர். ஜம்மு - காஷ்மீரில் நேற்று முன்தினம், தியாகிகள் தினம் கடைப் பிடிக்கப்பட்டதையடுத்து, பிரிவினைவாத அமைப்புகள், முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்திருந்தன. இதையடுத்து, அசம்பாவிதங்களை தவிர்க்க, அமர்நாத் யாத்திரை, நேற்று முன்தினம் நிறுத்தப்பட்டது. இந்நிலையில், யாத்திரை நேற்று மீண்டும் துவங்கியது. 13வது குழுவாக, 7,883 பேர், பனிலிங்கத்தை தரிசிக்க புறப்பட்டுச் சென்றனர்.