காடுபட்டி: சோழவந்தான் அருகே ஊத்துகுழி ஐந்து வாசல் அய்யனார் கோயில் புரவி எடுப்பு விழா 16 ஆண்டுகளுக்கு பின் நடந்தது. மூன்று நாட்களாக நடந்த விழாவில் நேற்று முன் தினம் மாலை தெ.புதுாரில் இருந்து கிராமத்தினர் குதிரை, காளை உட்பட நேர்த்திகடன் சிலைகளை சிறப்பு பூஜை நடத்தி மேள தாளங்களுடன் ஊர்வலமாக கோயிலுக்கு எடுத்து சென்றனர். சுவாமிக்கு சிறப்பு பூஜை நடந்தது. ஏற்பாடுகளை கிராமத்தினர் செய்தனர்.