பதிவு செய்த நாள்
16
ஜூலை
2019
01:07
திருப்போரூர்:தண்டலம் பெரியபாளையத்தம்மன் கோவிலில், அஷ்டபந்தன மஹா கும்பாபிஷே கம், நேற்று (ஜூலை., 15ல்) நடைபெற்றது.
திருப்போரூர் அடுத்த, தண்டலம் கிராமத்தில், பழமையான பெரியபாளையத் தம்மன் கோவில் உள்ளது.சிதிலமடைந்த இக்கோவிலை சீரமைக்க, கிராம மக்கள் மற்றும் விழா குழுவினர் முடிவு செய்தனர்.அதன்படி, சமீபத்தில் திருப்பணிகள் முடிக்கப்பட்டு, நேற்று (ஜூலை., 15ல்) காலை, 9:30 மணிக்கு, அம்மன் விமான கோபுரம் மற்றும் பரிவார தேவதைகளுக்கு, புனித நீர் ஊற்றி, மஹா கும்பாபிஷேகம், கோலாகலமாக நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் பங்கேற்று, அம்மனை தரிசித்தனர்.