குரு ஆசி இருந்தால் போதும் மதுரையில் இந்திரா சவுந்தர்ராஜன் பேச்சு
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
16ஜூலை 2019 01:07
மதுரை: ”குரு ஆசீர்வாதம் இருந்தால் தான் காரியங்கள் நிறைவேறும்,” என, மதுரை காஞ்சி காமகோடி பீடத்தில் நடந்த அனுஷ உற்ஸவத்தில் ’குரு மகிமை’ என்ற தலைப்பில் எழுத்தாளர் இந்திரா சவுந்தர்ராஜன் பேசினார்.
அவர் மேலும் பேசியதாவது: இறைவன் குறித்த மந்திரங்களின் பலன்களை சொல்லக்கூடாது. அது மனிதன் மூச்சு விடுவது போல செய்ய வேண்டிய முறையாகும். ஆதி சங்கரர் மிகவும் சொற்பகாலம் 32 வயதே வாழ்ந்து மிகப்பெரிய சமூக மாற்றத்தை செய்தார். மீமாம்ஸம் என்பது வேதத்தில் ஆராய்ச்சி செய்வதாகும்.
வேதம் என்பது சட்டம் என்றார் ஆதிசங்கரர். வேதமானது எந்த யுகத்திற்கும் பொருந்தக் கூடியது. நமது கர்மாவிற்கு தகுந்தாற்போல் நல்லவை, கெட்டவை அளிப்பது இறைவனால் மட்டுமே முடியும். குரு ஆசீர்வாதம் இருந்தால் தான் காரியங்கள் நிறைவேறும். தவம் செய்வோருக்கு பலன்நிச்சயம் கிடைக்கும் என்றார்.
மடத்தின் தலைவர் ராமசுப்பிரமணியன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் சுப்பிரமணி யன், நிர்வாகிகள் ஸ்ரீவத்ஸன், வெங்கடரமணி, கிருஷ்ணன், ராதாகிருஷ்ணன் ஏற்பாடுகளை செய்தனர். பொருளாளர் ஸ்ரீகுமார் நன்றி கூறினார்.