Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
Prev temple news திருத்தணி முருகன் கோவிலில் தெப்பம் ... திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் கோவிலில் ஆனி பவுர்ணமி திருக்கழுக்குன்றம் சொக்கம்மன் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
காஞ்சிப்பாடி கோவில்குளம் சீரமைப்பு பணி துவக்கம்
எழுத்தின் அளவு:
காஞ்சிப்பாடி கோவில்குளம் சீரமைப்பு பணி துவக்கம்

பதிவு செய்த நாள்

17 ஜூலை
2019
02:07

திருத்தணி: ஜூலை 17--ஊராட்சியில் உள்ள கோவில் குளத்தை, தனியார் தொண்டு நிறுவனம் துார்வாரி, கரைகள் சீரமைக்கும் பணிகளை நேற்று(ஜூலை., 16ல்) துவங்கி உள்ளன.

சென்னை, தி.நகரில், விவேகானந்தா அறக்கட்டளை என்கிற தொண்டு நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் சார்பில், திருவள்ளூர் மாவட்டத்தில், மொத்தம், 400 கிராமங்களில், ஓராசிரியர் பள்ளி ஏற்படுத்தி, அரசு பள்ளியில் படிக்கும் மாணவ- - மாணவியருக்கு, மாலை, 5:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை இலவசமாக கல்வி கற்பிக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில், திருவாலங்காடு ஒன்றியம், காஞ்சிப்பாடி கிராமத்தில் உள்ள, முத்துமாரியம் மன் கோவில் குளம், தண்ணீரின்றி வறண்டு கிடந்தது.இந்த குளத்தில் தண்ணீர் இருந்தால், அந்த கிராமத்தில் உள்ள, 400 குடும்பத்தினர் மற்றும் விவசாய கிணறுகளில் நிலத்தடி நீர் மட்டம் வெகுவாக உயரும்.தற்போது, குடிநீர் பஞ்சம் ஏற்பட்டதால், விவேகானந்தா அறக் கட்டளை நிறுவனம் கோவில் குளத்தை துார் வாரி சீரமைத்து, நிலத்தடி நீர்மட்டம் உயர்த்து வதற்கு தீர்மானித்து, அதற்கான பணிகள் நேற்று (ஜூலை., 16ல்) துவக்கப்பட்டன.

துவக்க விழாவில், ஓராசிரியர் பள்ளி நிறுவன தலைவர், கிருஷ்ணமூர்த்தி, செயலர், கிருஷ்ண மாச்சாரி மற்றும் காஞ்சிப்பாடி முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர், மணி ஆகியோர் பங்கேற்று, குளத்தை துார்வாரும் பணியை துவக்கி வைத்தனர்.தற்போது குளத்தில், இரண்டு, ஜே.சி.பி.,இயந்திரம், மூன்று டிராக்டர்கள் மூலம் துார் வாரும் பணி துரித வேகத்தில் நடந்து வருகிறது.இந்த நிறுவனத்தின் நோக்கம் கோவில் குளம், கிராம குளம் ஆகியவை மட்டும் துார் வாரி சீரமைக்க திட்டமிட்டுள்ளது.முதற்கட்டமாக, காஞ்சிப்பாடியில் துவங்கப்பட்டுள்ளது என, அந்த நிறுவனம் சார்பில் தெரிவிக்கப்பட்டது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; மதுரை சித்திரை திருவிழாவில் இன்று தேனூர் மண்டபத்தில் எழுந்தருளிய சுந்தரராஜப் பெருமாள் சுவாமி, ... மேலும்
 
temple news
புட்டபர்த்தி: சத்ய சாய் பாபாவின் நினைவு தினத்தையொட்டி, ஆராதனை மகோற்சவம் இன்று புட்டபர்த்தியில் ... மேலும்
 
temple news
கோவை; கோவையின் குலதெய்வம் என போற்றப்படும் தண்டு மாரியம்மன் கோவில்சித்திரை விழா கடந்த 15ம் முதல் நடந்து ... மேலும்
 
temple news
காரைக்கால்; காரைக்கால் அம்மையார் கோவிலில் சித்திரை சுவாதி நட்சத்திரத்தை முன்னிட்டு, அம்மையார் ... மேலும்
 
temple news
உத்தரகாண்ட்; இயற்கை எழில் கொஞ்சும் கங்கையாற்றின் கரையில் அமைந்திருக்கும் சிறப்பு மிக்க ஆன்மீக தலம் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar