பதிவு செய்த நாள்
17
ஜூலை
2019
02:07
திருக்கழுக்குன்றம்:திருக்கழுக்குன்றம், திருமலை சொக்கம்மன் கோவிலில், ஆனி பவுர்ணமி விழா, நேற்று (ஜூலை., 16ல்), விமரிசையாக நடந்தது.
திருக்கழுக்குன்றம் கிரிவலப்பாதையில், வேதகிரீஸ்வரர் கோவிலின் துணைக் கோவில்களில் ஒன்றான, திருமலை சொக்கம்மன் கோவில் உள்ளது.மாத பிறப்பு, பவுர்ணமி, விசாகம், சஷ்டி மற்றும் பிரதோஷ நாட்களில், கிரிவலம் வருவோர், இக்கோவில் அம்மனை தரிசித்து செல்வர். இந்நிலையில், ஆனி மாத பவுர்ணமியை ஒட்டி, நேற்று (ஜூலை., 16ல்), மூலவர் சொக்கம் மனுக்கு பால், தயிர், பன்னீர், சந்தனம், இளநீரால் மஹா அபிஷேகம் நடந்தது.
பின், பட்டுச்சேலை உடுத்தி, சிறப்பு புஷ்ப அலங்காரத்தில், சொக்கம்மன், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.ஏராளமான பக்தர்கள், அம்மனை தரிசித்தனர். விழா ஏற்பாடுகளை, கோவில் அர்ச்சகர், ராஜேந்திரன் செய்தார்.