சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் 20ம் தேதி தேர் திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
17ஜூலை 2019 02:07
சங்கராபுரம் : சங்கராபுரம் அடுத்த பூட்டை மாரியம்மன் கோவில் தேர் திருவிழா வரும் 20ம் தேதி நடக்கிறது.அதனையொட்டி வரும் 19ம் தேதி ஊரணி பொங்கல் நிகழ்ச்சியும், இரவு முத்துப் பல்லக்கில் அம்மன் வீதியுலாவும், வாண வேடிக்கையும் நடைபெறும். 20ம் தேதி மாலை 4:00 மணிக்கு அம்மன் தேர் ஏறுதல், பாலபட்டு ஜாகீர் முத்துசாமி, அமைச்சர் சண்முகம், கவுதம சிகாமணி எம்.பி., எம்.எல்.ஏ.,க்கள் உதயசூரியன், குமரகுரு ஆகியோர் வடம் பிடித்து இழுத்து தேரோட்டத்தை தொடங்கி வைக்கின்றனர்.விழாவிற்கான ஏற்பாடுகளை பூட்டை, செம்பராம் பட்டு, பாவளம் கிராம மக்கள் செய்து வருகின்றனர்.