பதிவு செய்த நாள்
18
ஜூலை
2019
02:07
திருப்புவனம் : மடப்புரத்தில் ஆடி வெள்ளியை முன்னிட்டு பக்தர்களுக்காக செய்யப்பட்டுள்ள பாதுகாப்பு ஏற்பாடு குறித்து போலீசாரும் தீயணைப்பு துறையினரும் ஆய்வு செய்தனர். பிரசித்தி பெற்ற காளி கோயில்களில் மடப்புரம் பத்ரகாளியம்மன் கோயிலும் ஒன்று, இங்கு வாரந்தோறும் வெள்ளி, ஞாயிறு, செவ்வாய் கிழமைகளில் பெண்கள் கூட்டம் அதிகமாக காணப்படும்.
குறிப்பாக ஆடி வெள்ளியன்று 10 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருவார்கள் என்பதால் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன. நேற்று முன்தினம் கோயில் செயல் அலுவலர் செல்வி, மானாமதுரை டி.எஸ்.பி.,கார்த்திகேயன் உள்ளிட்டோர் கோயிலில் பாதுகாப்பு ஏற்பாடுகளை ஆய்வு செய்தனர். தடுப்புகள் அமைக்கப்பட்டுள்ளன. மடப்புரத்திற்கு நாளை ஆடி முதல் வெள்ளியை முன்னிட்டுஅரசு போக்குவரத்து கழகம் சிறப்பு பேருந்துகளை இயக்க உள்ளது. போலீசாரும் போக்குவரத்து கழகத்தினரும் ஷேர் ஆட்டோக்களால் இடையூறு ஏற்படா வண்ணம் ஷேர் ஆட்டோக்களை முறைப்படுத்த வேண்டும்.பக்தர்களின் பயணம் பாதுகாப்பாக அமைய உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனர்.