பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
02:07
தி.மலை: திருவண்ணாமலை, அருணாசலேஸ்வரர் கோவிலில் பக்தர்கள் உண்டியல் காணிக்கை யாக, 98 லட்சத்து, 57 ஆயிரத்து, 28 ரூபாயை செலுத்தி இருந்தனர். திருவண்ணாமலை, அருணாச லேஸ்வரர் கோவிலில், மாதந்தோறும் பக்தர்கள் செலுத்தும் உண்டியல் காணிக்கை, பவுர்ணமி நாள் முடிந்து, எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, ஆனி மாத பவுர்ணமி முடிந்த நிலையில், நேற்று உண்டியல் காணிக்கை எண்ணப்பட்டது. இதில், 98 லட்சத்து, 57 ஆயிரத்து, 28 ரூபாயும், 187 கிராம் தங்கம், 680 கிராம் வெள்ளி, ஆகியவற்றையும் பக்தர்கள் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.