பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
02:07
ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அடுத்த, தாராட்சி கிராமத்தில் உள்ளது நுாக்காள பரமேஸ் வரி அம்மன் கோவில்.பக்தர்கள் பங்களிப்புடன் கட்டப்பட்ட இக்கோவிலில், ஆடி மாதம், முதல் ஞாயிற்றுக்கிழமை திருவிழா நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு, வரும், 21ம் தேதி இவ்விழா நடைபெற உள்ளது.இதையொட்டி, அன்றைய தினம், காலை, 4:30 மணிக்கு, காப்பு கட்டுதல் நிகழ்ச்சியுடன் விழா துவங்குகிறது. மதியம், 3:00 மணிக்கு, கிராம குளக்கரையில், பொங்கல் வைத்தல் நடைபெறும்.இரவு, 7:30 மணிக்கு, உற்சவர் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.