பதிவு செய்த நாள்
19
ஜூலை
2019
02:07
காஞ்சிபுரம்: உத்திரமேரூர் அடுத்த நீரடி கிராமத்தில், சப்த கன்னியம்மன் கோவில் உள்ளது. இக்கோவிலில் ஆண்டுதோறும், ஆடி முதல் வெள்ளி, தீ மிதி திருவிழா நடத்தப்படுகிறது.
அதன்படி, ஆடி முதல் வெள்ளியான இன்று (ஜூலை., 19ல்), இரண்டாம் ஆண்டு தீ மிதி விழா நடைபெறுகிறது.இதையொட்டி, காலை, 9:00 மணிக்கு சப்த கன்னியம்மனுக்கு சிறப்பு அபிஷேக மும், மதியம், 1:00 மணிக்கு கூழ்வார்த்தலும், மாலை, 6:00 மணிக்கு தீ மிதி திருவிழாவும் நடை பெறுகிறது.இரவு, 8:00 மணிக்கு அம்மன் வீதியுலாவும், 10:00 மணிக்கு மாரியம்மன் தெருக்கூத்து நாடக குழுவினரின் நாடகம் நடைபெறுகிறது.விழாவிற்கான ஏற்பாடுகளை, விழாக்குழுவினர் மற்றும் நீரடி கிராம மக்கள் செய்துஉள்ளனர்.