பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
12:07
திருப்பூர்: ஆடி மாத முதல் வெள்ளிக்கிழமையை முன்னிட்டு, இந்து அன்னையர் முன்னணி சார்பில், அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு ஊர்வலம் நேற்று நடந்தது.
இந்து அன்னையர் முன்னணி சார்பில், ஆண்டு தோறும் அம்மனுக்கு மஞ்சள் நீர் அபிஷேகம் செய்யும் நிகழ்ச்சி, ஆடி மாதம் நடக்கிறது. நான்காம் ஆண்டு மஞ்சள் நீராட்டு ஊர்வலம்நேற்று விமரிசையாக நடந்தது.அன்னையர் முன்னணியினர், கரட்டாங்காடு மாகாளியம்மன் கோவிலில் துவங்கி, கோட்டை மாரியம்மன் கோவில் வரை நடந்தது. இந்து முன்னணி மாநில தலைவர் காடேஸ்வரா சுப்பிரமணியம், நிகழ்ச்சிக்கு தலைமை வகித்தார். பெண்கள் தங்கள் எடுத்துவந்திருந்த மஞ்சள்நீரை, தங்கள் கரங்களால், அம்மனுக்கு அபிஷேகம் செய்தனர். ஆம்ஸ்ட்ராங் நிட்டிங் மில்ஸ் ரேணுகாதேவி, மஞ்சள் நீர் அபிஷேகத்தை துவக்கி வைத்தார். சுலோச்னா ஸ்பின்னிங் மில்ஸ் ஆஷா உட்பட, ஏராளமான பெண்கள், கோட்டை மாரியம்மனுக்கு அபிஷேகம் செய்தனர்.