திருவண்ணாமலை: கிரிவலப்பாதையில் உள்ள இரட்டைகாளியம்மன் கோவிலில், ஆடி முதல் வெள்ளி கிழமையை முன்னிட்டு, தீ மிதி திருவிழா சிறப்பாக நடைபெற்றது. விழாவில் ஏராளமான பெண் பக்தர்கள் தீ குண்டம் இறங்கி நேர்த்திக்கடன் செலுத்தினர். அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.