பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
01:07
திருப்பூர்: திருப்பூர், பெரியபாளையத்தில் உள்ள, ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவில் சிறப்புகளை, தேவாரத்தில் சுந்தரமூர்த்தி நாயனார், பாடல்களாக பாடியுள்ளார்.தொல்லியியல் துறை கட்டுப்பாட்டில் உள்ள, ஸ்ரீ ஆவுடைநாயகி அம்மன் சமேத ஸ்ரீசுக்ரீஸ்வரர் கோவிலில் நேற்று, 21ம் ஆண்டு திருவிளக்கு பூஜை விமரிசையாக நடந்தது.ஆடி முதல் வெள்ளிக்கிழமையான நேற்று மதியம், 1:00 மணிக்கு, சுக்ரீஸ்வரர் மற்றும் ஆவுடைநாயகி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடந்தது.தொடர்ந்து, சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளி, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர். மாலை, 5:00 வழிபாடு பூஜை செய்து, அம்மையப்பரை வழிபட்டனர்.