பதிவு செய்த நாள்
20
ஜூலை
2019
05:07
விருத்தாசலம் : விருத்தாசலம் திரவுபதி கோவில் தீமிதி விழாவில், பக்தர்கள் சாட்டையடி வாங்கி, நேர்த்திக்கடன் செலுத்தினர்.
கடலுார் மாவட்டம், விருத்தாசலம், சாத்துக்கூடல் சாலை, ஆலமரத்து திரவுபதி அம்மன் கோவில் தீமிதி திருவிழா, கடந்த மாதம் 14ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. தீமிதி உற்சவம் நேற்று நடந்தது. அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மாலை 4:00 மணியளவில் அர்ச்சுனர், திரவுபதி அம்மன் சுவாமிகள் சிறப்பு அலங்காரத்தில் எழுந்தருளினர். மாலை 5:00 மணிக்கு மேல், மணிமுக்தாற்றில் இருந்து நுாற்றுக்கும் மேற்பட்ட பக்தர்கள் ஊர்வலமாக வந்து, தீக்குண்டத்தில் இறங்கினர். பின்னர், கோவில் வளாகத்தில் மண்டியிட்டு, சாட்டையடி வாங்கி, அம்மனுக்கு நேர்த்திக்கடன் செலுத்தினர். இரவு 7:00 மணிக்கு மேல் சிறப்பு அலங்காரத்தில் திரவுபதி அம்மன் வீதியுலா வந்து பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.