Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சாட்டையடி வாங்கி பக்தர்கள் ... குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் கொடியேற்றம் குச்சனுார் சனீஸ்வரர் கோயிலில் ...
முதல் பக்கம் » இன்றைய செய்திகள்
இரண்டு மணி நேரத்தில் கிடைத்த அத்தி வரதர் தரிசனம்
எழுத்தின் அளவு:
இரண்டு மணி நேரத்தில் கிடைத்த அத்தி வரதர் தரிசனம்

பதிவு செய்த நாள்

21 ஜூலை
2019
12:07

காஞ்சிபுரம் : பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையான நேற்று(ஜூலை 20) காஞ்சி அத்தி வரதரை தரிசிக்க லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் எனவும் பக்தர்கள் கூட்டம் அலைமோதும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் பக்தர்கள் எண்ணிக்கை குறைவாகவே  காணப்பட்டது. ஏராளமான பக்தர்கள் சிரமமின்றி நேற்று அத்தி வரதரை தரிசனம் செய்து சென்றனர்.

காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில் 40 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறும் அத்தி வரதர் வைபவம் விமரிசையாக நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு நாளும் அதிகளவில் பக்தர்கள் வந்து அத்தி வரதரை தரிசனம் செய்து செல்கின்றனர். சில நாட்களாக  நாள்தோறும் இரண்டு லட்சத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் அன்றாடம் வந்ததால் கூட்ட நெரிசலில் சிக்கி இதுவரை ஐந்து பேர் இறந்தனர். இதனால் பக்தர்கள் ஏராளமானோர் பீதியடைந்துள்ளனர். பெருமாளுக்கு உகந்த நாளான சனிக்கிழமையான நேற்று லட்சக்கணக்கில்  பக்தர்கள் வருவார்கள் என்றும் கோவிலைச் சுற்றியுள்ள மாட வீதிகளில் நிற்ககூட இடமிருக்காது என எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு சனிக்கிழமைகளில் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான பக்தர்கள் குவிந்தனர். ஆனால் நேற்றைய சனிக்கிழமை முற்றிலும் வேறாக  இருந்தது. பக்தர்கள் பெருமளவில் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தனர். கோவிலின் வடக்கு மாடவீதிகள் காலியாகவே இருந்தன. வரிசைகள் அனைத்தும் காலியாக இருந்ததைக் கண்டு பக்தர்கள் ஆச்சரியப்பட்டனர்.பக்தர்கள் சிலர் இறந்ததாலும் சனிக்கிழமை  கூட்டம் அதிகம் இருக்கும் என்ற அச்சத்தாலும் பக்தர்கள் குறைவாக இருந்திருக்கலாம் என பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் தெரிவிக்கின்றனர்.

இரண்டு மணி நேரத்தில்..: சராசரியாக இரண்டு மணி நேரத்தில் பக்தர்கள் நேற்று தரிசனம் செய்தனர். பக்தர்கள் களைப்பாகக் கூடாது என்பதற்காக பிஸ்கட் குடிநீர் உள்ளிட்டவை பல்வேறு இடங்களில் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றன. பக்தர்களும் நேற்று சிரமமின்றி  அத்தி வரதரை தரிசனம் செய்தனர்.

சிறப்பு தரிசனம்: டோனர் பாஸ் வைத்திருப்பவர்கள் மாலை 6:00 மணி வரை மட்டுமே அனுமதிக்கப்படுகின்றனர். 6:00 மணிக்கு மேல் ஸ்பீட் தரிசனம் பெயரில் 300 ரூபாய் கட்டண தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகின்றனர். 300 ரூபாய் கட்டணத்தில் ஒரு  நாளைக்கு 500 பேர் வரை அனுமதிக்கப்படுகின்றனர். நேற்று முன்தினம் முதல் இந்த நடைமுறை துவங்கியுள்ளது.

 
மேலும் இன்றைய செய்திகள் »
temple news
மதுரை; திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் பங்குனி திருவிழாவில் இன்று தேரோட்டம் ... மேலும்
 
temple news
இளையான்குடி; இளையான்குடி அருகே தாயமங்கலத்தில் உள்ள முத்துமாரியம்மன் கோயில் பங்குனி பொங்கல் விழா ... மேலும்
 
temple news
பழநி; பழநியில், பங்குனி உத்திர விழா நிறைவு பெற்ற நிலையில் பக்தர்கள் வருகை அதிகம் இருந்தது.பழநியில் ... மேலும்
 
temple news
அவிநாசி; அவிநாசி வட்டம், கருவலூர் ஊராட்சியில் மாரியம்மன் கோவில் இரண்டாம் நாள் தேர் திருவிழாவில் ... மேலும்
 
temple news
மானாமதுரை; மானாமதுரை அருகே எஸ்.கரிசல்குளத்தில் உள்ள கேட்ட வரம் தரும் முத்து மாரியம்மன் கோயில் பங்குனி ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar