பதிவு செய்த நாள்
22
ஜூலை
2019
11:07
பாலக்காடு: கேரள மாநிலம், திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், 58 யானைகளுக்கு உணவளிக்கும், யானையூட்டு திருவிழா, நேற்று விமரிசையாக நடந்தது.
கேரளாவில், முதல்வர், பினராயி விஜயன் தலைமையிலான, இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, திருச்சூர் வடக்குநாதர் கோவிலில், ஆடி மாதம், யானைகளுக்கு, யானையூட்டு எனப்படும், உணவு ஊட்டும் திருவிழா சிறப்பாக நடத்தப்படும்.இந்தாண்டுக்கான விழா, நேற்று நடந்தது. காலையில், கோவில் தெற்கு கோபுர நடையில், 56 யானைகளுக்கு, 10 வகை பழங்களுடன், 500 கிலோ புழுங்கல் அரிசியில், மூலிகைகள், வெல்லம், மஞ்சள், நெய், கரிம்பு ஆகியவை கலந்த உணவை ஊட்டும் நிகழ்ச்சி நடந்தது.வடக்கன் பரவூரைச் சேர்ந்த, 12 வயதான, வாரியத்து ஜெயராஜன் என்ற குட்டி யானைக்கு உணவு வழங்கி, கோவில் மேல்சாந்தி செறுமுக ஸ்ரீராஜ் நாராயணன் நம்பூதிரி, இந்த நிகழ்ச்சியை துவக்கி வைத்தார். ஆடி மாத முதல் நாளில் நடத்த வேண்டிய இந்நிகழ்ச்சி, சந்திர கிரகணம் காரணமாக நேற்று நடந்தது.