திருச்சியிலிருந்து கரூர் வழியாக கோவை- ஈரோடு செல்லும் நெடுஞ்சாலையில் குளித்தலையில் அருள்பாலிக்கிறார் அருள்மிகு கடம்பவனேஸ்வரர். இறைவி முற்றில்லாமுலையம்மை என்று அழைக்கப்படுகிறார். வடநாட்டில் காசியைப் போன்றே வடக்கு நோக்கி அமைந்துள்ள தென்னாட்டுத் திருத்தலம் இதுவென்பதால் இந்த கோயிலை, தட்சிண காசி என்று அழைக்கிறார்கள்.