பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
11:07
ஆனைமலை: ஆனைமலை மாசாணியம்மன் கோவில் உண்டியல் காணிக்கை, 43 லட்சத்து, 63 ஆயிரத்து, 690 ரூபாய் வசூலானது.
ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில் உள்ள, 22 நிரந்தர உண்டியல்கள் மற்றும் ஒன்பது தட்டு காணிக்கை உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு எண்ணப்பட்டது.நிரந்தர உண்டியல்களில், 34 லட்சத்து, 37 ஆயிரத்து, 474 ரூபாயும்; தட்டு காணிக்கை உண்டியல்களில், ஒன்பது லட்சத்து, 26 ஆயிரத்து, 216 ரூபாயும் வசூலானது. 223 கிராம் தங்கம் மற்றும் 701 கிராம் வெள்ளி இருந்தது. இதில், மாசாணியம்மன் கோவில் உதவி ஆணையர் ஆனந்த் தலைமை வகித்தார். ஈச்சனாரி விநாயகர் கோவில் உதவி ஆணையர் கிருஷ்ணகுமார், பொள்ளாச்சி ஆய்வர் மல்லிகா முன்னிலை வகித்தனர். கண்காணிப்பாளர் தமிழ்வாணன், புலவர் லோகநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.