பதிவு செய்த நாள்
23
ஜூலை
2019
11:07
காஞ்சிபுரம்: காஞ்சிபுரம், காளிகாம்பாள் கோவிலில், 28ம் ஆண்டு ஆடி பெருவிழா நடந்தது. காஞ்சிபுரம், மடம் தெருவில், பழமையான காளிகாம்பாள் கோவில் உள்ளது.இக்கோவில் ஆடி பெருவிழா, 19ம் தேதி துவங்கியது. விழாவையொட்டி, காயாரோகணீஸ்வரர் கோவில் குளக்கரையில் இருந்து ஜலம் திரட்டி, அம்பாள் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது.தினமும், அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், பூஜைகள், தீபாராதனை நடந்தன. ஞாயிற்றுக்கிழமையன்று, திரளான பெண்கள், கோவில் வளாகத்தில், அம்மனுக்கு கூழ் வார்த்தனர்.இரவு, சிறப்பு மலர் அலங்காரத்தில், சிம்ம வாகனத்தில் அம்மன் எழுந்தருளி, வீதியுலா சென்றார்.இன்று மாலை, 4:00 மணிக்கு, அம்மனுக்கு மஞ்சள் நீராட்டு விழா நடைபெறுகிறது.