* நம்பிக்கையுடன் பிரார்த்தித்தால் நடப்பதெல்லாம் நன்மையே. * நீ ஒரு பொருளை மதித்தால் மட்டுமே, அந்த பொருளும் உன்னை மதிக்கும். * உலகில் எந்த வேலையும் தாழ்ந்தது அல்ல. ஆசையுடன் பணியில் ஈடுபடு. * மனதில் அமைதி நிலைக்க, பிறரிடமுள்ள நிறைகளை மட்டும் பார். * எதிர்பார்ப்பு இல்லாத அன்புடன், எல்லா உயிர்களையும் அரவணைத்துக் கொள். * பிரச்னை அனைத்திற்கும் மூலகாரணம் பணம். அதுதான் பாவம் செய்யத் தூண்டுகிறது. * அற்ப விஷயங்களில் நாட்டம் கொள்ளாதே. நல்ல விஷயங்களில் மட்டும் ஈடுபடு. * நம்பிக்கையும், மன உறுதியும் இருந்தால் எல்லா நன்மைகளும் வந்தடையும். * உன்னால் பிறருக்கு மகிழ்ச்சியளிக்க முடியுமானால், அதுதான், வாழ்வின் பயன். * கடவுளை நேசிப்பவனுக்கு, துன்பம் என்ற பேச்சுக்கு இடமில்லை. * உடல் மட்டுமல்ல மனமும் சோம்பலால் கெடுகிறது. சுறுசுறுப்புடன் கடமையை செய். * இரக்கம் இல்லாத மனிதன், தன்னை கொடிய விலங்கு நிலைக்கு மாறுகிறான். * தவறை எண்ணி வருந்தாதே. அதை திருத்திக் கொள்வதே நல்ல பண்பு. * பிறர் மனதைப் புண்படுத்துவது நல்லதல்ல. சுடுசொற்களைப் பேசுவது பெரும் பாவம். * தியானம், தவம் செய்வதால் மட்டுமே ஒருவன் கடவுளின் அருள் பெற முடியாது.