கரூர் மாவட்டம், நீங்கவரம் என்ற ஊரில் உள்ளது சாத்தாயி அம்மன் கோயில். திரு ச்சியிலிருந்து 22 கி.மீ. இங்கு கருவறையில் சப்தமாதர்களான பிராமி, மகேஸ்வரி, கவுமாரி, வைஷ்ணவி, வாராகி, இந்திராணி, இவர்களுக்கு நடுநாயகமாய் சாமுண்டி தேவியே சாத்தாயி அம்மன் என்ற திருநாமத்தில் அருள்பாலிக்கிறாள். இந்த அம்மன் கழுத்தில் தேள் மாலை காணப்படுகிறது. இவளை, தேள்மாலை சூடிய அம்மன் எனப் போற்றுகின்றனர்.