பதிவு செய்த நாள்
09
ஆக
2019
12:08
சென்னை:அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டு குழு சார்பில், சிறுவாபுரி முருகன் கோவி லில், 11ம் தேதி, திருக்கல்யாண மகோற்சவம் நடக்க உள்ளது.
திருமணத்தடை நீக்கி, வேண்டும் வரம் தரும், சென்னை அருகே உள்ள சிறுவாபுரி வள்ளி மணவாள முருகனுக்கு நடத்தப்படும், வள்ளி கல்யாண மகோற்சவம், பக்தர்களிடையே வரவேற்பு பெற்றதாகும்.அண்ணாமலையார் ஆன்மிக வழிபாட்டுக்குழு சார்பில், 10வது ஆண்டாக நடக்கும் திருக்கல்யாண மகோற்சவம், வரும், 11ம் தேதி நடக்கிறது.
இவ்விழாவில், காலையில், விநாயகர், ஆதிமூலவர் அண்ணாமலையாளர் உண்ணாமலை அம்மனுக்கு, சிறப்பு அபிஷேகம் நடக்கிறது. தொடர்ந்து, மூலவருக்கும், வள்ளி மணவாள முருகனுக்கும், சிறப்பு அபிஷேகம் நடக்கிறது.
தொடர்ந்து, 10:00 மணியளவில், திருக்கல்யாணம் நடக்க உள்ளது. 11:00 மணிக்கு, சுவாமி புறப்பாடும், 12:00 மணிக்கு அன்னதானமும் நடக்க உள்ளது. மேலும் விபரங்களுக்கு, அண்ணாமலையாளர் ஆன்மிக வழிபாட்டுக் குழுவினரை, 97909 57593, 99443 09651, 99406 25308 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.