மானாமதுரை: மானாமதுரையில் வீரஅழகர்கோயில் ஆடி பிரம்மோற்ஸவ விழாவையொட்டி திருக்கல்யாணம் நடைபெற்றது.கடந்த 7 ந் தேதி கொடியேற்றத்துடன் விழா துவங்கியது, தினமும் சுவாமி பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி வீதிவுலா நடைபெற்றது. திருக்கல்யாணத்திற்காக நேற்று மாலை வீரஅழகர் யானை வாகனத்தில் சவுந்தரவல்லி தாயார் மண்டபத்திற்கு எழுந்தருளினார், அங்கு சிறப்பு ஹோமம்,ஆராதனை நடத்தப்பட்டது. இரவு 7:40 மணிக்கு வீரஅழகரிடமிருந்து திருமாங்கல்யம் பெறப்பட்டு, சவுந்தரவல்லி தாயாரின் கழுத்தில் அணிவிக்கப்பட்டது. நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்றனர்.