பதிவு செய்த நாள்
13
ஆக
2019
12:08
பழநி, பிரதோஷத்தை முன்னிட்டு, பழநியில் சிவன்கோயில்களில், அபிஷேகம், பூஜைகள் நடந்தது. பழநி பெரியாவுடையார் கோயிலில், மாலை பிரதோஷ வேளையில் நந்திபகவான், மூலவருக்கும் அபிஷேகம், அலங்காரம் நடந்தது.
சிவன் பார்வதி ரிஷபவாகனத்தில் உட்பிரகாரத்தில் வலம் வந்தனர். இடும்பன் கோயிலில் சிவகிரிநாதர், உமா மகேஸ்வரியம்மனுக்கு அபிஷேகம், அலங்காரத்தில், திருவுலா நடந்தது. மலைக்கோயில், பெரியநாயகியம்மன் கோயில், கைலாசநாதர், சன்னதி வீதி மீனாட்சி சுந்தரேஸ்வரர் கோயில், வேளீஸ்வரர் கோயில், மதனபுரம் அண்ணாமலையார், உண்ணாமலை நாயகி கோயில், நேதாஜிநகர் காமாட்சியம்மன் ஏகாம்பரேஸ்வரர் கோயில், புதுநகர் சிவன் ஆகிய கோயில்களில் பிரதோஷ வழிப்பாட்டில் பக்தர்கள் பங்கேற்றனர்.
கன்னிவாடி: பிரதோஷத்தை முன்னிட்டு காரமடை ராமலிங்கசுவாமி கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. பால், இளநீர், சந்தனம் உள்ளிட்ட பொருட்களால் அபிேஷகம் நடந்தது. விசேஷ மலர் அலங்காரத்துடன் பூஜைகள் நடந்தது.* சித்தையன்கோட்டை காசிவிசுவநாதர் கோயில், சின்னாளபட்டி சதுர்முக முருகன் கோயில், கன்னிவாடி சோமலிங்கசுவாமி கோயில், வெல்லம்பட்டி மாரிமுத்துசுவாமி கோயில், பித்தளைப்பட்டி அண்ணாமலையார் கோயிலில் பிரதோஷ அபிேஷக, ஆராதனைகள் நடந்தது.