திருவையாறுக்கு அருகிலுள்ள கண்டமங்களம் கிராமத்தில் வாத்தலை நாச்சியம்மன் கோயில் அமைந்துள்ளது. இங்குள்ள அம்மனிடம் வேண்டிக்கொண்டு மணி வாங்கிச்சென்று கோயிலின் தலவிருட்சமான வேப்பமரத்தில் கட்டினால், அது சிலநாட்களில் மரத்திற்குள் மறைந்து விடுவதுடன் நம் வேண்டுதலும் நிறைவேறிவிடுகிறது என்கிறார்கள்.