Left Pillar
 
Top Temple Header
 Press Ctrl+g to toggle between English and Tamil
தேடும் வார்த்தையை ஆங்கிலத்தில் டைப்செய்து ஸ்பேஸ்பார் தட்டவும்.
 
Menu Top

கோயில்கள்
01.  
02.  
03.  
04.  
05.  
06.  
07.  
08.  
09.  
10.  
11.  
12.  
13.  
14.  
15.  
16.  
17.  
18.  
19.  
20.  
21.  
22.  
23.  
24.  
25.  
26.  
27.  
28.  
29.  
30.  
31.  
32.  
33.  
34.  
35.  
36.  
37.  
38.  
Top Decoration
 
Top Design

ஜோசியம்
இறைவழிபாடு
சிவ குறிப்புகள்
ஆன்மீக பெரியோர்கள்
ஆன்மிக தகவல்கள்
பிற பகுதிகள்
bottom design
 

இன்றைய செய்திகள் :
சரணாகதி என்பதன் பொருள் என்ன? அவல் விரும்பும் ஆஞ்சநேயர்
முதல் பக்கம் » ஆன்மீக வகுப்பறை!
மரியாதை மனசில் இருக்கட்டும்
எழுத்தின் அளவு:

பதிவு செய்த நாள்

13 ஆக
2019
04:08

பால்டியூக்ஸ் என்னும் ஆங்கில பத்திரிகையாளரும், லாவஸ்டைன் என்னும் பிரான்ஸ் அறிஞரும் ஒருமுறை தமிழகம்  வந்தனர். அப்போது மகாசுவாமிகள் சென்னையில் முகாமிட்டிருந்தார். இருவரும் சுவாமிகளை தரிசிக்க விரும்பினர். வெளிநாட்டினரான அவர்களைக் காண வெளியே வந்த சுவாமிகள், வைக்கோல் மீது மரப்பலகையை ஆசனமாக்கி அமர்ந்தார். அவரது முகத்தில் புன்னகை அரும்பியது. மடாதிபதிக்கு உரிய சிம்மாசனம் உள்ளிட்ட  வசதிகள் எல்லாம் இருந்தாலும், சுவாமிகள் விரும்புவது எளிமை தானே! இதை நேரில் பார்த்த அவர்களுக்கு வியப்பு மேலிட்டது. நாற்காலியில் உட்கார்ந்தே பழகிய அவர்களால், கால்களை மடித்து சம்மணம் இட முடியவில்லை. கால்களை நீட்டியபடி  சுவாமிகளின் முன் அமர்ந்தனர். இது மரியாதைக் குறைவான செயல் அல்லவா? அதனால் கால் நீட்டுவது கூடாது என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

அப்போது சுவாமிகள் குறுக்கிட்டு, ”எது அவர்களுக்கு வசதியோ அப்படியே உட்காரட்டும். மரியாதை மனதில் இருக்கிறதே தவிர, உடலில் அதை காட்ட வேண்டிய அவசியமில்லை. இவர்களைப் பார்த்தால் வளர்ந்த குழந்தைகளாகத் தான் என் மனசிற்குத் தோன்றுகிறது. குழந்தைகள் எப்படி உட்கார்ந்தால் தான் என்ன?” என்றார். அதைக் கேட்டதும் வியப்பின் உச்சிக்கு போய் விட்டனர். அவரிடம் மனதிலுள்ள சந்தேகங்களைக் கேட்டுத் தெளிவு பெற்றனர். கடைசியாக ”சுவாமி! உலகெங்கும் உள்ள மக்களுக்கு நீங்கள் தெரிவிக்க விரும்பும் செய்தி என்ன?’ எனக் கேட்டனர். அன்பால் வேற்றுமை மறையும். இதனால் உலகம் முழுவதும் ஒரே குடும்பம் என்ற எண்ணம் வலுப்படும். எளிமையாக வாழ்வது மனநிம்மதி அளிக்கும்” என்றார் மகாசுவாமிகள்.  அவர்களின் மனதில் அமைதி குடிகொண்டது.

 
மேலும் ஆன்மீக வகுப்பறை! »
கலக்கத்தில் இருப்பவர்களுக்கு பலத்தைக் கொடுப்பவர் ராமர். அவரது திருவடியில் சரணடைந்த பக்தர்களைக் ... மேலும்
 
ஆடி என்றொரு கொடிய அரக்கன் முன்னொரு காலத்தில் இருந்தான். பிரம்மாவை வேண்டிப் பல வரங்களைப் பெற்றான். ... மேலும்
 
கவலை, கடன்களில் இருந்து மீள வழி கூறுங்கள் என அறிஞரிடம் ஒருவர் கேட்டார்.அதற்கு அவர் உங்களுக்காக ... மேலும்
 

நீ நீயாக இரு ஏப்ரல் 05,2024

கழுதை ஒன்று வழி தவறி காட்டிற்குள் சென்றது. அங்கு இருந்த மானிடம், ‘ஏன் எல்லா விலங்குகளும் ஓடுகிறது’ எனக் ... மேலும்
 

ராஜா மரியாதை ஏப்ரல் 05,2024

* நீதியின் பாதையில் நடப்பவர்களுக்கு ராஜமரியாதை கிடைக்கும்.* தேவனிடம் கேட்பது கிடைக்கும்.* எண்ணத்தில் ... மேலும்
 

 தினமலர் முதல் பக்கம்   கோயில்கள் முதல் பக்கம்
Right Pillar
Left Pillar
Copyright © 2024 www.dinamalar.com. All rights reserved.
Right Pillar