பெற்றோரை வேதனைப் படுத்துவோரிடம், ”நீ எத்தனை வழிபாடுகளில் ஈடுபட்டாலும் உன் பாவங்களை மன்னிக்க மாட்டேன்” என்கிறான் இறைவன். “நான் நேரத்துக்கு தொழுகிறேன்; தானம் செய்கிறேன்; நன்மை செய்கிறேன்” என்று சொல்லும் ஒருவர் கூட, பெற்றோரை கவனிக்காவிட்டால் தொழுகை பயன் தராது.
* பெற்றோர் அநியாயம் செய்தாலும், நீங்கள் அன்பு செலுத்துவது கடமை. * தாயை விட மனைவியை சிறந்தவளாக கருதுபவரை இறைவன் சபிக்கிறான். அவரது நற்செயலை இறைவன் ஏற்பதில்லை. * உன் தந்தையின் உறவைப் பாதுகாத்துக் கொள். இல்லாவிட்டால் உன்னுள் இருக்கும் ஒளியை இறைவன் போக்குவான். * பெற்றோருக்கு உதவும் பிள்ளைகளுக்கு வாழ்த்து உண்டாகட்டும்.