பதிவு செய்த நாள்
14
ஆக
2019
12:08
தர்மபுரி: தர்மபுரி, விருபாட்சிபுரத்தில் உள்ள புத்திகே மடத்தில், ராகவேந்திர சுவாமியின், 348 வது ஆண்டு ஆராதனை மகோத்ஸவ விழா இன்று மாலை, துவங்க உள்ளது. இன்று மாலை, 6:00 மணிக்கு கொடியேற்றம், 6:30 மணிக்கு கோ பூஜை நடக்கிறது. நாளை காலை, 7:00 மணிக்கு சத்யநாராயண பூஜை, நாளை மறுநாள் சிறப்பு ஆராதனை, வரும், 17ல், காலை, 8:00 மணிக்கு சஹஸ்ர, 1,008 இளநீர் அபி ஷேகம் நடக்கிறது. 19ல், கணபதி ஹோமம், சுக்ஞானேந்திர தீர்த்தர் ஆராதனை நடக்கிறது. விழா நடக்கும் அனைத்து நாட்களிலும் காலை, 5:00 மணிக்கு சுப்ரபாதம், 6:00 மணிக்கு வேத பாராயணமும், 8:00 மணிக்கு அபிஷேகம், 10:00 மணிக்கு பல்லக்கு உற்சவம் நடக்க உள்ளது. ஏற்பாடுகளை, விழா கமிட்டி தலைவர் வெங்கடேசன், செயலாளர் வெங்கட்ராமன், பொருளாளர் முரளிதரன் உட்பட பலர் செய்து வருகின்றனர்.