பதிவு செய்த நாள்
18
ஆக
2019
12:08
திண்டிவனம்: திண்டிவனத்தில் ராகவேந்திரர் சுவாமிகளின் 348வது ஆராதனை விழா நடந்தது.
திண்டிவனம் செஞ்சி ரோட்டில் உள்ள ராகவேந்திரர் சுவாமிகள் கோவில் தியான மண்டபத்தில் மந்தராலய மடத்தின் பீடாதிபதி சுபதீந்திர தீர்த்த சுவாமிகளின் அருளுடனும், மலேசிய மந்த்ராலய பீடாதிபதி குருஜி ராகவேந்த்ராச்சாரின் ஆசியுடனும் விழா நடந்தது.விழாவையொட்டி காலை 10:30 மணிக்கு சுவாமிக்கு சிறப்பு அபிஷேகமும், மதியம் 1:00 மணிக்கு கொண்டையாங்குப்பம் பாண்டுரங்க பஜனைக் குழுவினரால் திவ்யபிரபந்தமும், மங்களார்த்தியும் நடந்தது.
விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.திருக்கோவிலுார்என்.ஜி.ஜி.ஓ., நகர் ராகவேந்திரர் கோவிலில் நேற்று காலை 6:00 மணிக்கு நிர்மால்ய அபிஷேகம், 8:00 மணிக்கு ஸ்ரீ விஷ்ணு சஹஸ்ரநாமம், ஹரிவாயு ஸ்துதி பாராயணம், 9:30 மணிக்கு ராகவேந்திரர் மற்றும் ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு பஞ்சாமிர்த அபிஷேகம், வெள்ளிக் கவச அலங்காரம், மகா தீபாராதனை நடந்தது. தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.மாலை 6:00 மணிக்கு ஸ்வஸ்தி வாகனத்தில் சுவாமிக்கு மங்கள ஆரத்தி, 7:00 மணிக்கு பரதநாட்டியம் நடந்தது. ஏராளமான பக்தர்கள் சுவாமியை வழிபட்டனர்.