சாணார்பட்டி: சாணார்பட்டியில் நேற்று நடந்த கருப்பணசுவாமி கோயில் விழாவில் புரவி எடுக்கும் நிகழ்ச்சி நடந்தது. நேற்று முன்தினம் இரவு காளியம்மன் கோவிலில் செய்யப்பட்ட கருப்பண சுவாமி, குதிரை, நாய் உள்ளிட்ட நூற்றுக்கும் மேற்பட்ட சிலைகள் எடுத்துவரப்பட்டு பஸ் ஸ்டாப் அருகே அமைக்கப்பட்டிருந்த பந்தலில் வரிசைப்படுத்தி வைக்கப்பட்டது. நேற்று காலை கருப்பண சுவாமி, குதிரை உள்ளிட்ட சிலைகளுக்கு கண் திறப்பு நடந்தது. தொடர்ந்து பொங்கல் வைத்து அபிஷேக, ஆராதனை நடந்தது. மாலையில் அதிர்வேட்டு முழங்க டிராக்டர்களில் சிலைகள் ஏற்றப்பட்டு வீரசின்னம்பட்டி ரோடு வழியாக புரவி எடுப்பு ஊர்வலமாக சென்று மேட்டு கருப்பண சுவாமி கோவிலை அடைந்தது.