ராஜபாளையம் : ராஜபாளையம் அடுத்த முகவூர் அருகே முத்தாரம்மன் கோயில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. முகவூர் மேற்கே முகவூர் குளம் கீழ்புறம் அமைந்துள்ள முத்தாரம்மன் கோயில் இப்பகுதியில் உள்ளோர் குல தெய்வமாக வழிபட்டு வருகின்றனர்.
வருடத்திற்கு ஒரு முறை ஆடி மாத கடைசி வெள்ளிக்கிழமை விழாக்கோலத்துடன் இங்கு குழுமும் பக்தர்கள் தங்கள் குடும்பத்துடன் தங்கினர். ஞாயிற்று கிழமை வரை மூன்று நாட்களும் தினமும் முப்பழ அபிேஷகம், சிறப்பு அலங்காரம், ஆராதனையுடன் நேர்த்திகடன் செய்து கிடா வெட்டி சுவாமிக்கு படையலிட்டு வழிபட்டனர். அன்னதானம் நடந்தது. விழாவை முன்னிட்டு பூ அலங்காரத்தில் முத்தாரம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். சுற்று வட்டார பகுதி பக்தர்கள் திரளாக பங்கேற்று அம்மன் அருள் பெற்றனர்.