திருப்புவனம் : திருப்புவனத்தில் கிருஷ்ணர் - ராதை திருக்கல்யாண உற்ஸவத்தில் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். திருப்புவனத்தில் சற்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் மண்டலி சார்பில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி கடைசியில் கிருஷ்ணர்--ராதை திருக்கல்யாண உற்ஸவம் நடைபெறுவது வழக்கம்.
இந்தாண்டு கடந்த வெள்ளிக்கிழமை திருமஞ்சனம், திருவாதாரணத்துடன் விழா தொடங்கியது, மாலை கிருஷ்ணர் வீதியுலா நடைபெற்றது. சனிக்கிழமை காலை உஞ்சவிருத்தியுடன் விழா தொடங்கியது. ஞாயிறு காலை அலங்கார கோலத்தில் கிருஷ்ணர்-ராதை, பாமா-ருக்மணி ஆகியோருக்கு சிறப்பு பூஜை நடைபெற்றன. திருக்கல்யாண சீர்வரிசைகளான பலகாரங்கள், பழங்கள், பொருட்கள் உள்ளிட்டவை ஊர்வலமாக எடுத்து வரப்பட்டன. திருக்கல்யாண உற்ஸவத்தில் ஞானாநந்தர் சுவாமிகள், தியாகராஜ சுவாமிகள், ஸ்யாமா சாஸ்திரிகள், முத்துஸ்வாமி தீட்சிதர் பாடல்கள் பாடப்பட்டன. திருக்கல்யாண உற்ஸவத்தில் கோவிந்தராஜன்என்பவர் கிருஷ்ணராகவும் ராமுஎன்பவர் ராதையாகவும் மாறி மாலை மாற்றி கொண்டனர், தொடர்ந்து திருக்கல்யாணம் நடைபெற்றது.ஏற்பாடுகளை சற்குரு நாம ஸங்கீர்த்தன பஜன் செய்திருந்தது.