பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
காஞ்சிபுரம் : காஞ்சிபுரம், அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனை மூலமாக, 2.40 லட்சம் ரூபாய், அஞ்சல் துறைக்கு வருவாயாக கிடைத்துள்ளது.
காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோவிலில், 1979ம் ஆண்டிற்கு பின், கடந்த ஜூலை, 1ம் தேதி, அனந்த புஷ்கரணியில் இருந்து, அத்தி வரதர் வெளி வந்து, ஆக., 17ம் தேதி வரையில், பக்தர் களுக்கு அருள்பாலித்தார்.இந்த வைபவத்தை முன்னிட்டு, ஜூலை, 18ம் தேதி, தமிழக கவர்னர், பன்வாரிலால் புரோஹித், அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறையை வெளியிட்டார். ஒரு அஞ்சல் உறை, 20 ரூபாய்க்கு விற்கப்பட்டது. காஞ்சிபுரம் அஞ்சல் கோட்டத்தின் கீழ், 12 ஆயிரம் அத்தி வரதர் சிறப்பு அஞ்சல் உறை விற்பனையாகியுள்ளது.உறை விற்பனை மூலமாக, 2.40 லட்சம் ரூபாய் வருவாய் கிடைத்துள்ளது என, அஞ்சல் கோட்ட கண்காணிப்பாளர், சிவாஜி கணேஷ் தெரிவித்தார்.