பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
திருத்தணி : ரசாயனம் கலந்த விநாயகர் சிலைகள் தயாரிக்கின்றனரா என, தாசில்தார், வருவாய் துறையினர் மற்றும் போலீசார் நேற்று 19ம் தேதி, ஆய்வு செய்தனர்.
அடுத்த மாதம், 2ம் தேதி, விநாயகர் சதுர்த்தி விழா கொண்டாடப்படுகிறது. இதையடுத்து, திருத் தணி- - அரக்கோணம் சாலை, சேகர்வர்மா நகர் பகுதியில், விநாயகர் சிலைகள் தயாரிக் கும் பணியில் ஊழியர்கள் மும்மரமாக ஈடுபட்டுள்ளனர்.ஒரு மாதமாக ஊழியர்கள், விநாயகர் சிலைகளை, பல்வேறு வடிவங்களில் தயாரித்து விற்பனைக்காக வைத்துள்ளனர். இந்நிலை யில், அரசால் தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக் மற்றும் ரசாயன பொருட்கள் பயன்படுத்தி, விநாயகர் சிலைகள் செய்யப்படுகிறதா என ஆய்வு செய்ய, திருவள்ளூர் கலெக்டர் மகேஸ் வரி நேற்று 19ம் தேதி, உத்தரவிட்டார்.
அதன்படி, திருத்தணி தாசில்தார் செங்கலா, வருவாய் ஆய்வாளர், உதயகுமார் மற்றும் காவல் உதவி ஆய்வாளர், சரவணன் மற்றும் கிராம நிர்வாக அலுவலர், அருணாச்சலம் ஆகியோர், அரக்கோணம் சாலையில், விநாயகர் சிலை தயாரிக்கும் இடத்திற்கு நேரில் சென்று ஆய்வு செய்தனர்.அங்கு, விநாயகர் சிலைகள் தயாரிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த நபர்களிடம், விநாயகர் சிலைகள் எதனால் செய்யப்படுகிறது.
ரசாயனம் கலந்து செய்யப்படுகிறதா என, ஆய்வு செய்து, விதிமுறைகள் மீறினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என, எச்சரித்தனர்.அப்போது, அவர்கள் நாங்கள், விநாயகர் சிலை செய்வதற்கு தேங்காய் நார் மற்றும் சாக் பவுடர் என்ற கலவையைக் கொண்டுதான் விநாயகர் சிலை தயாரிக்கிறோம்’ என, கூறினர்.