பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
புல்லரம்பாக்கம் : புல்லரம்பாக்கம், திரவுபதி அம்மன் கோவில், தீ மிதி திருவிழாவில், ஏராள மானோர் தீ மிதித்து அம்மனை வழிபட்டனர்.
திருவள்ளூர் அடுத்த, புல்லரம்பாக்கம் கிராமத்தில், தர்மராஜா சமேத திரவுபதி அம்மன் கோவில் திருவிழா, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவின் நான்காவது நாள் உற்சவ த்தை முன்னிட்டு, அர்ச்சுனன் - சுபத்திரை திருக்கல்யாண உற்சவம் நடந்தது.ஊர் பொதுமக்கள், சீர்வரிசை எடுத்து வந்து, திருமணத்தை நடத்தி வைத்தனர். பின், இரவு, தம்பதி சமேதரராக, புல்லரம்பாக்கம் கிராம வீதிகளில் உலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தனர்.
விழாவின் முக்கிய நிகழ்ச்சியான, தீ மிதி திருவிழா, நேற்று முன்தினம் 18ம் தேதி இரவு நடந்தது. இதில், ஏராளமான பக்தர்கள் தீ மிதித்து, அம்மன் அருளைப் பெற்றனர். இரவு, 7:00 மணிக்கு மேல், திரவுபதி அம்மன் வீதியுலா வந்து, பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.