பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
ஆனைமலை:ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், காலிப் பணியிடங்கள் நிரப்பப்படா மல் உள்ளதால், பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.ஆனைமலை மாசாணியம்மன் கோவில், தமிழகத்தின் முக்கிய ஆன்மிக தலமாக உள்ளது. அமாவாசை, குண்டம் திருவிழா உள்பட முக்கிய தினங்களில், லட்சக்கணக்கான பக்தர்கள், தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து வந்து செல்கின்றனர்.
கோவில் நிர்வாகத்துக்கென, ஒரு உதவி ஆணையாளர், கண்காணிப்பாளர், ஐந்து அர்ச்சகர்கள், மின் பணியாளர், எழுத்தர் என மொத்தம், 19 பணியிடங்கள் ஒதுக்கப்பட்டு உள்ளன.இதில், தற்போது, மூன்று அர்ச்சகர்கள், மின் பணியாளர், கணக்கர், எழுத்தர், சீட்டு விற்பனையாளர் என, 13 பணியிடங்கள் காலியாக உள்ளது. இப்பணியிடங்கள் கடந்த, ஐந்து ஆண்டுகளாக நிரப்பப்படாமல் உள்ளது.பக்தர்களுக்கு தரிசன சீட்டு வழங்குவது, கோவில் வளாகத்தில் ஏற்படும் மின் பழுதை சரிசெய்வது, கோவில் கணக்கு பராமரிப்பு, எழுத்துப்பணி மேற்கொள்வ தில் சிக்கல் ஏற்படுகிறது. தற்காலிக பணியாளர் நியமித்து, மின் பராமரிப்பு பணி மேற்கொள்ளப்படுகிறது.
காலிப் பணியிடங்களால், பணியாளர்களுக்கு கூடுதல் பணிச்சுமைக ஏற்படுகிறது. அமாவா சை மற்றும் விசேஷ தினங்களில் அதிக அளவில் பக்தர்கள் வரும்போது கடும் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். அன்றாட நிர்வாக பணிகளில் தொய்வு ஏற்படுகிறது.காலிப் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி கடந்த, ஐந்து ஆண்டுகளாக கோவில் நிர்வாகத்தினர் அறநிலையத்துறை க்கு பலமுறை கடிதம் அனுப்பி உள்ளனர்.ஆனால், தமிழகத்தின் முக்கியமான கோவிலாக இருந்தும், அறநிலையத்துறையினர் பணியிடங்களை நிரப்பாமல் உள்ளதாக ஊழியர்கள் குமுறுகின்றனர்.