பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
உடுமலை:உடுமலை திருப்பதி வேங்கடேச பெருமாள் கோவில், மண்டலாபிஷேக நிறைவு விழா நாளை 21ல் நடக்கிறது.உடுமலை தளி ரோடு செங்குளம் கரையில் அமைந்துள்ள திருப்பதி ஸ்ரீ வேங்கடேச பெருமாள் கோவில் கும்பாபிஷேகம் கடந்த ஜூன் 14ம் தேதி நடந்தது. தொடர்ந்து 48 நாள் மண்டலாபிஷேக பூஜைகள் நடந்தன. மண்டலாபிஷேக நிறைவு விழா, இன்றும் 20 ம் தேதி , நாளையும் (21ம் தேதி )நடக்கிறது.
இன்று, லட்சுமி ஹயக்கிரீவர், சக்கரத்தாழ்வார், லட்சுமி நரசிம்மர், தன்வந்திரி, விஷ்வக் சேனர், ஆஞ்சநேயர் சுவாமிகளுக்கு, மாலை, 4:00 மணிக்கு அபிஷேக அலங்கார பூஜை நடக்கி றது. நாளை 21ல், காலை, 7:00 மணி முதல் வேங்கடேச பெருமாள், பத்மாவதி தாயார், ஆண் டாள் நாச்சியார் சுவாமிகளுக்கு விசேஷ பூஜை மற்றும் ஹோமம் நடக்கிறது.காலை,9:00 மணிக்கு சிறப்பு யாகம், 11:30 மணிக்கு நிறை வேள்வி, பகல், 12:00 மணிக்கு தீர்த்த பிரசாதம், கோஷ்டி வினியோகம் மற்றும் அன்னதானம் நடக்கிறது.
காலை,10:00 மணி முதல் மதியம், 1:00 மணி வரை பஜனை மற்றும் பிருந்தாவனம் நிகழ்ச்சி நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை உடுமலை திருப்பதி ஸ்ரீ பாலாஜி சேரிட்டபிள் டிரஸ்ட் அறங்காவலர்கள் மற்றும் திருப்பணி குழுவினர் செய்து வருகின்றனர்.