உளுந்தூர்பேட்டை: பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் 60 அடி உயர் மகமேர் உற்சவத்தில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர்.
உளுந்தூர்பேட்டை தாலுகா பு.கொணலவாடி கிராமத்தில் ஸ்ரீ ஐயனார் கருமியம்மன் கோவில் தேரோட்டம் நாளை (21ம் தேதி) நடக்கிறது. அதனையொட்டி கடந்த 6ம் தேதி காப்பு கட்டுதலுடன் விழா துவங்கியது. 13. 14, 15ம் தேதிகளில் கருமியம்மன் கேடயம் வாகனத்தில் உற்சவம் நடந்தது. 16, 17, 18ம் தேதிகளில் சிங்க வாகனத்தில் அம்மன் உற்சவம் நடந்தது. இன்று அதிகாலை 1 மணியளவில் 65 அடி உயர மகமேருவில் ஸ்ரீவிநாயகர் ஸ்ரீ ஐயனார், ஸ்ரீ கருமியம்மன் சுவாமிகள் வீதியுலா நடந்தது. அப்போது கருமியம்மன் கோவிலில் இருந்து ஏராளமானோர் தீப்பந்தங்களை ஏந்தியவாறு மகமேர் வரை வந்தனர். அதன் பின்னரே மகமேர் புறப்பட துவங்கியது. மகமேருவில் ஆயிரகணக்கானோர் கலந்து கொண்டு சுவாமியை வழிபட்டனர். காலை 11 மணியளவில் உச்சிமெலியில் எல்லையில் அம்மன் அழைத்து வரும் நிகழ்ச்சி நடந்தது. நாளை (21ம் தேதி) மதியம் 1 மணியளவில் தேரோட்டம் நடக்கிறது. இதில் அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளிக்கிறார்.