பதிவு செய்த நாள்
20
ஆக
2019
12:08
திருப்பூர்:திருப்பூர் ஈஸ்வரன் கோவில் வீதியில் உள்ள, தமிழ்நாடு சர்வோதய சங்கத்தில், கொலு பொம்மை வாங்குவதற்கு என்றே தனிப்பட்ட வாடிக்கையாளர்கள் கூட்டம் இருக் கிறது.
விநாயகர் சதுர்த்தி, கிருஷ்ண ஜெயந்தி மற்றும் நவராத்திரி விழா நேரத்தில், களிமண்ணில் செய்த, வண்ணமிகு கொலு பொம்மைகள் விற்பனைக்கு வந்துள்ளன.கிருஷ்ண ஜெயந்தி மற்றும் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு, பொம்மைகள் விற்பனை துவங்கியுள்ளது.
குறைந்தபட்சம், 60 ரூபாயில் துவங்கி, 1,400 ரூபாய் வரையிலான சிலைகள், நேர்த்தியாக அணி அணியாய் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன.தவழும் கண்ணன், விநாயகர், இலை கண்ணன், கும்பகலசம், ராமானுஜர், காமாட்சி, ஆண்டாள், காமதேணு, ஆஞ்சநேயர், பிருத்தியங்கரா தேவி, கலர் ரங்கநாதர், ராகவேந்திரர், பசு கண்ணன், நாவல்கனி, மும்மூர்த்திகள், பாலாம் பிகை, பூதேவி, கருடவாகனம், ஆண்டாள் ரெங்கமன்னார் என, 38 வகையான சிலைகள், விற்பனைக்காக வைக்கப்பட்டுள்ளன.தினமும், காலை, 9:00 மணி முதல், இரவு, 8:00 மணி வரை, கொலு பொம்மைகள் விற்பனை நடக்கிறது.
சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாத, வீட்டில் வைத்து கொண்டாட வசதியான, சிலைகள் விற்பனைக்கு வந்துள்ளதாக, சர்வோதய சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.