பெரியநாயக்கன்பாளையம் அருகே சகாய அன்னை ஆலய தேர் பவனி திருவிழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2019 01:08
பெ.நா.பாளையம்: பெரியநாயக்கன்பாளையம் அருகே ஜோதிபுரத்தில், இடைவிடா சகாய அன்னை ஆலய தேர் திருவிழா நடந்தது.இந்த திருவிழா கடந்த, 11ம் தேதி, கொடியேற்றத்துடன் துவங்கியது. நேற்று முன்தினம் 18ம் தேதி, விழாவையொட்டி காலையில், கோவை மறை மாவட்ட முதன்மை குரு தந்தை ஜான் ஜோசப் ஸ்தனிஸ் தலைமையில், திருப்பலி நடந்தது. மாலையில் நடந்த கூட்டு திருப்பலிக்கு பின், தேர்பவனி வீரபாண்டி பிரிவில் துவங்கி, சாமி செட்டிபாளையம் வந்து, மீண்டும் வீரபாண்டி பிரிவை அடைந்தது. விழாவில் வான வேடிக்கை நடந்தது. விழா ஏற்பாடுகளை, பங்கு தந்தை மரிய சூசை ஆரோக்கியநாதன், பங்கு பேரவை மற்றும் அருட்சகோதரிகள் செய்து இருந்தனர்.