அரசாங்கத்தில் பணியாற்றிய கலீபா ஹசரத் அலி, ஒருநாள் வரவு, செலவு கணக்கை சரி பார்த்துக் கொண்டிருந்தார். அவர் அருகில் விளக்கு ஒன்று எரிந்தது. அப்போது அவரைத் தேடி ஒருவர் வந்தார். என்ன விஷயமாக வந்திருக்கீறீர்கள் எனக் கேட்டார் கலீபா. சொந்த விஷயமாக என்று பதிலளிக்கவே, விளக்கை அணைத்து விட்டு, மற்றொரு விளக்கை ஏற்றினார் கலீபா. பேசி விட்டு அவர் கிளம்பும் போது பழைய விளக்கை ஏற்றினார். ”கலீபா! இந்த விளக்குகளை மாற்றி ஏற்றியதன் நோக்கம் என்ன?” எனக் கேட்டார் அவர். ”நீங்கள் வரும் போது அரசுப்பணி செய்து கொண்டிருந்தேன். அதனால் அரசு அளித்த விளக்கை பயன்படுத்தினேன். அது மக்களின் வரிப்பணத்தில் வாங்கியது. சொந்த விஷயங்களைப் பேசும் போது அரசு விளக்கை அணைத்து விட்டு, எனக்கு சொந்தமானதை ஏற்றினேன்.” என்றார். இவரைப் போல் நல்லவர்கள் வாழ்ந்த பூமியில் தான், இன்றைய ஆட்சியாளர்களும் இருக்கிறார்கள்.