கர்நாடக மாநிலம், மளூர் என்னும் திருத்தலத்தில் நவநீதகிருஷ்ணன் கோயில் உள்ளது. இங்கு குழந்தை வடிவில் தவழ்ந்துகொண்டிருக்கும் கிருஷ்ணரின் திருவுருவம் கரு நிறக்கல்லில் உருவானது. இந்த அபூர்வ விக்ரகத்தில் கிருஷ்ணனின் பாதங்களில் சங்கு -சக்கர ரேகைகள் உள்ளதைக் காணலாம். கையில் வெண்ணெய் உருண்டையுடன் உள்ள குழந்தை கிருஷ்ணனின் கழுத்தில் முத்துமாலை, புலிநக மாலை அசைந்தாடும் விதத்திலும், இடுப்பில் கட்டப்பட்டிருக்கும் சலங்கைப்பட்டையின் ஒலி கேட்கும் விதத்திலும் கருநிறக்கல்லாலான ரேகைகளுடன் அற்புதமாகக் காட்சிதருகிறார்.