மைலாப்பூரில் லிப்கோ ஸ்ரீராமானுஜ சேவா ஸ்ரீ விருது விழா
எழுத்தின் அளவு:
பதிவு செய்த நாள்
20ஆக 2019 05:08
சென்னை : லிப்கோ பதிப்பகம் குழுமம் சார்பில் வழங்கப்படும் 2019ம் ஆண்டுக்கான லிப்கோ ஸ்ரீ ராமானுஜ சேவா ஸ்ரீவிருது, இந்தாண்டு யு.வி.கிருஷ்ணமாச்சாரி, யு.வி.டாக்டர். கருணாகராச்சாரியார் மற்றும் யு.வி.கோமதம் சம்பத்குமாராச்சாரியர் ஆகியோருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
ஆக.,22ம் தேதி, மாலை 6 மணிக்கு சென்னை, மைலாப்பூர், ஆர்.ஆர்.சபாவில் நடக்கும் இந்த விழாவில் ஓய்வு பெற்ற நீதிபதியும், கேரள கவர்னருமான சதாசிவம், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ராஜகோபாலன் மற்றும் சென்னை ஐகோர்ட் நீதிபதி பிஎன்.பிரகாஷ் சிறப்பு விருந்தினர்களாக பங்கேற்று, விருதுகளை வழங்கி கவுரவிக்கின்றனர்.